10th தமிழ் இயல் 2.4 புயலிலே-ஒரு-தோணி

ப. சிங்காரம்

10th தமிழ் இயல் 2.4 புயலிலே-ஒரு-தோணி
: :

1. தமிழினங்கள் குடியேறிய நாடுகள் எது? மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா
2. கப்பித்தான் என்பதன் பொருள் என்ன? தலைமை மாலுமி (கேப்டன்)
3. தொங்கான் என்பதன் பொருள் என்ன? கப்பல் (போக்குவரத்து)
4. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது? 2000 ஆம் ஆண்டு
5. புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்ட அமைப்பு யாது? புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்யு மையம்
6. எந்த ஆண்டு புயல்களுக்கு 64 பெயர்களை பட்டியலிடப்பட்டது? செப்டம்பர் 2004 - ம் ஆண்டு
7. எந்தெந்த நாடுகள் புயலின் பெயர்களை வழங்கியுள்ளன? வங்கதேசம், இந்தியா, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து
8. கஜா புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது? இலங்கை
9. பெய்ட்டி என்ற புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது? தாய்லாந்து
10. இந்தியா வழங்கிய புயலின் பெயர்கள் யாவை? அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்) , லெகர் (அலை)
11. இந்தியா வழங்க இருக்கும் புயலின் பெயர்கள் யாவை? மேக், சாஹர், வாயு
12. வங்க கடலில் வீசும் புயல்? இடம்புரி புயல்
13. ஹவாய் தீவுகளை தாக்கும் புயல்? வலம்புரி புயல்
14. புயல்களின் சுழற்ச்சி விளைவை 1835 - ல் கண்டுபிடித்தவர் யார்? காஸ்ப்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்
15. புயலின் வலம்புரி மற்றும் இடம்புரி சுழற்சிக்கு என்ன பெயர்? கொரியாலிஸ் விளைவு
16. எந்த மீன்கள் கூட்டம் கூட்டமாய், கண்மாயில் முதுகு தெரிய மூழ்கி நீந்தும் எருமைகள் என முனகல் ஒளியோடு பின்தொடர்ந்தன? அவுலியா மீன்
17. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது? புயலிலே ஒரு தோணி
18. புயலிலே ஒரு தோணி என்ற நூலின் ஆசிரியர் யார்? ப. சிங்காரம்
19. ப. சிங்காரம் அவர்கள் எங்கு பிறந்தார்? சிங்கம்புணரி, (சிவகங்கைமாவட்டம்)
20. ப. சிங்காரம் எந்த நாட்டில் இருந்து பொழுது தென்கிழக்காசியாப் போர் மூண்டது? இந்தோனேசியா
21. கடற்கூத்து என்னும் அத்தியாயம் எந்த நூலில் உள்ளது? புயலிலே ஒரு தோணி
22. ப. சிங்காரம் அவர்கள் எந்த இதழில் பணியாற்றினார்? தினத்தந்தி
23. தன் சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்சிக்காக வழங்கியவர்? ப. சிங்காரம்
24. "பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" என்ற வரியில் சிறப்பிக்கப்படும் ஊர் எது? கொல்லிமலை, நாமக்கல்
25. "பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? அகநானுறு