8th தமிழ் இயல் 8.3 அயோத்திதாசர்-சிந்தனைகள்
1. சமத்துவம், பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் யார்? தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்
2. தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்? அயோத்திதாசர்
3. நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, உவப்பான எழுத்து, பாராட்டத்தக்க உழைப்பு ஆகிய ஐந்து பண்புகளையும் ஒருசேரப்பெற்ற சிந்தனையாளர் யார்? அயோத்திதாசர்
4. தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்? அயோத்திதாசர்
5. அயோத்திதாசர் பிறந்த ஆண்டு எது? 1845மே 20ம் நாள் சென்னையில் பிறந்தார்
6. அயோத்திதாசர் இயற்பெயர் என்ன? காத்தவராயன்
7. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதனால் பள்ளிப்பருவத்தில் பல இன்னல்களுக்கு உள்ளானவர்? அயோத்திதாசர்
8. அயோத்திதாசர் (காத்தவராயன் யாரிடம் கல்வியும், சித்தமருத்துவம் பயின்றார்? அயோத்திதாசர் பண்டிதர்
9. தன் ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டவர் யார்? அயோத்திதாசர்
10. அயோத்திதாசர் எங்கு சென்று வாழ்ந்தார்? நீலகிரி
11. அயோத்திதாசர் திருமணத்திற்கு பிறகு எங்கு சென்றார்? பர்மா
12. பர்மாவில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவந்த தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்டவர் யார்? அயோத்திதாசர்
13. அயோத்திதாசர் அறிந்த மொழிகள் யாவை? தமிழ், பாலி, ஆங்கிலம் வடமொழி
14. அயோத்திதாசர் எந்த வகையான நூல்களை ஆழ்ந்து காற்றார்? இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயதத்துவம்
15. ஒருபைசாத் தமிழன் என்னும் வாரஇதழை தொடங்கியவர்? அயோத்திதாசர்
16. அயோத்திதாசர் ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கிய ஆண்டு எது? 1907
17. ஒருபைசாத் தமிழன் இதழை ஓர் ஆண்டுக்கு பின் என்ன பெயராக மாற்றினார்? தமிழன்
18. மக்களுக்கு நீதி நேர்மை, சரியான பாதை ஆகியவற்றை தெளிவுபடுத்துவதே தமிழன் இதழின் நோக்கம் என்று கூறியவர் யார்? அயோத்திதாசர்
19. தமிழன் இதழ் மூலம் எங்கெல்லாம் சமூக சிந்தனை, பகுத்தறிவு உணர்வுகளை பரப்பினார்? தமிழ்நாடு, மைசூர், கோலார், ஐதராபாத், ரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா
20. ஒரு மனிதன் அறிவு வளர்ச்சிபெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று கூறியவர்? அயோத்திதாசர்
21. கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம்வளர்த்தல் போன்றவற்றையும் கற்கவேண்ண்டும் என்று வலியுறுத்தியவர் யார்? அயோத்திதாசர்
22. சங்ககாலப் பெண்களைப் போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்று தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையை பெறவேண்டும் என்று எடுத்துரைத்தவர் யார்? அயோத்திதாசர்
23. போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு சிமிட்டு இரத்தினைச் சுருக்கம் பாலாவாகடம் போன்ற நூல்கள் பதிப்பித்தவர் யார்? அயோத்திதாசர்
24. "என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாத்துரையாரும்"என கூறியவர்? தந்தை பெரியார்
25. அயோத்திதாசர் கூறும் வாழும் முறை யாது? அன்பு கொண்டு வாழ வேண்டும்
26. அன்பு கொண்ட நாட்டில் ஒரே நீர்த்துறையில் புலியும் பசுவும் நீர் அருந்தும் என்றவர் யார்? அயோத்திதாசர்
27. நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாது என கூறியவர்? அயோத்திதாசர்
28. புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச எ சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா போன்ற நூல்கலை எழுதியவர் யார்? அயோத்திதாசர்
29. திருவள்ளுவர், ஓளவையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பெளத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர் யார்? அயோத்திதாசர்
30. எந்த மருத்துவமனைக்கு அயோத்திதாசர் பண்டிதர் மருத்துவமனை என பெயர் சூட்டப்பட்டது? சென்னை தாம்பரம் சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவனை
31. ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்க"திராவிட மகாஜன சங்கம்"என்னும் அமைப்பை தோற்றுவித்தவர்? அயோத்திதாசர்
32. அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? 1892
33. விடுதலை என்பது ஆட்சிமாற்றம் மடடுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அமையவேண்டும் என கூறியவர்? அயோத்திதாசர்
34. சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டும் இருக்ககூடாது, மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமையவேண்டும் என கூறியவர? அயோத்திதாசர்
35. அயோத்திதாசர் ----- சமூகசீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்? தென்னிந்திய
36. அயோத்திதாசர் நடத்திய இதழ்? ஒருபைசா தமிழன்
37. கல்வியோடு ----- கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து? கைத்தொழிலும்
38. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது? ஆழ்ந்த படிப்பு
39. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது? மழை