6th தமிழ்-இயல் 7.4 நால்வகைச்-சொற்கள்

1. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்? நான்கு (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)
2. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்? பெயர்ச்சொல்
3. பெயர்ச்சொல் (எ. கா.) ? பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்
4. வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல்? வினைச்சொல் (எடுத்துக்காட்டு) வா, போ, எழுது, விளையாடு
5. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல்? இடைச்சொல் (எடுத்துக்காட்டு) உம் – தந்தையும் தாயும், மற்று - மற்றொருவர், ஐ - திருக்குறளை
6. பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வரும் சொல்? உரிச்சொல் (எடுத்துக்காட்டு) மா – மாநகரம், சால - சாலச்சிறந்தது
7. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்? வ. உ. சிதம்பரனார்
8. வ. உ. சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்? பாரதியார்
9. வ. உ. சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்? பாரதியார் பாடல்கள்
10. ”சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்த நாள்? 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள்
11. ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்? வ. உ. சிதம்பரனார்
12. நாட்டுப்பற்று என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Patriotism
13. இலக்கியம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Literature
14. கலைக்கூடம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Art Gallery
15. மெய்யுணர்வு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? Knowledge of Reality