7th தமிழ் இயல் 7.2 வயலும்-வாழ்வும்
1. "ஓடை எல்லாம் தாண்டிப்போயி ஏலேலங்கிடி ஏலேலோ" என்ற பாடலின் தொகுப்பாசிரியர் யார்? கி. வா. ஜகந்நாதன்
2. குழி என்பதன் பொருள் என்ன? நில அளவைப்பெயர்
3. சாண் என்பதன் பொருள் என்ன? நீட்டல் அளவைப்பெயர்
4. மணி என்பதன் பொருள் என்ன? முற்றிய நெல்
5. சும்மாடு என்பதன் பொருள் என்ன? பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்து கொள்ளும் துணிச்சுருள்
6. சீலை என்பதன் பொருள் என்ன? புடவை
7. மடை என்பதன் பொருள் என்ன? வயலுக்கு நீர் வரும் வழி
8. கழலுதல் என்பதன் பொருள் என்ன? உதிர்தல்
9. நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர் இதற்க்கு ----- என்று பெயர்? போரடித்தல்
10. நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடல் எது? நாட்டுப்புற பாடல்
11. நாட்டுப்புற பாடலின் வேறு பெயர் என்ன? வாய்மொழி இலக்கியம்
12. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புற பாடல்கள் மலை அருவி என்னும் நூலாக தொகுத்தவர் யார்? ஜகந்நாதன்
13. உழவர் சேற்று வயலில் ----- நடுவர்? நாற்று
14. வயலில் விளைந்த முற்றிய நெற்பயிர்களை ----- செய்வர்? அறுவடை
15. 'தேர்ந்தெடுத்து ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? தேர்ந்து + எடுத்து
16. 'ஓடை + எல்லாம் ' என்பதனைச் சேர்த்தெழுதுக? ஓடையெல்லாம்
17. பொருத்துக:
நாற்று - நடுதல்
நீர் -பாய்ச்சுதல் கதிர்
களை - பறித்தல்