10th தமிழ் இயல் 7.4 சிலப்பதிகாரம்

1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? இளங்கோவடிகள்
2. சுண்ணம் என்பதன் பொருள் என்ன? நறுமணப்பொடி
3. காருகர் என்பதன் பொருள் என்ன? நெய்பவர் (சாலியர்)
4. தூசு என்பதன் பொருள் என்ன? பட்டு
5. துகிர் என்பதன் பொருள் என்ன? பவளம்
6. வெறுக்கை என்பதன் பொருள் என்ன? செல்வம்
7. நொடை என்பதன் பொருள் என்ன? விலை
8. பாசவர் என்பதன் பொருள் என்ன? வெற்றிலை விற்போர்
9. ஓசுனர் என்பதன் பொருள் என்ன? எண்ணெய் விற்போர்
10. மண்ணுள் வினைஞர் என்பதன் பொருள் என்ன? ஓவியர்
11. மண்ணீட்டாளர் என்பதன் பொருள் என்ன? சிற்பி
12. கிழி என்பதன் பொருள் என்ன? துணி
13. ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றி கூறிய நூல் எது? திருத்தணிகையுலா
14. "சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது? திருத்தணிகையுலா
15. ஏழு வகையான இசைகள் யாவை? குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
16. ஏழு சுரங்கள் யாவை? ச, ரி, க, ம, ப, த, நி
17. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாக - - - என்னும் இடத்தை அடைந்தனர்? கொடும்பாளூர்
18. தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாக சென்றால் எந்த ஊரை அடையலாம்? மதுரை
19. கோவலனையும், கண்ணகியையும் வழிநடத்தி சென்றவர் யார்? கவுந்தியடிகள்
20. கணவனை இழந்த கண்ணகி மதுரையில் இருந்து எந்த இடத்தை அடைந்தாள்? நெடுவேள் குன்றம் (சுருளிமலை) 'வேங்கைக் கானல்' என்னும்மிடம்
21. உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள் என்பது? உரைப்பாட்டு மடை
22. வாய்க்காலில் வரும் நீரை வயலுக்கு திருப்பிவிடுவது? மடை
23. உரை என்பது என்ன? பேசும் மொழியின் ஓட்டம்
24. செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது எது? உரைப்பாட்டு மடை
25. ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்று? சிலப்பதிகாரம்
26. முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என சிறப்பிக்கப்படும் நூல்? சிலப்பதிகாரம்
27. மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறும் நூல்? சிலப்பதிகாரம்
28. சிலப்பதிகாரத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன? 3 காண்டம் (புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)
29. சிலப்பதிகாரத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 30 காதைகள்
30. சிலப்பதிகாரம் எந்த நூலோடு தொடர்புடையது? மணிமேகலை
31. இரட்டை காப்பியங்கள் எவை? சிலப்பதிகாரம், மணிமேகலை
32. இளங்கோவடிகள் எந்த மரபைச்சார்த்தவர்? சேர மரபு
33. மணிமேகலையின் ஆசிரியர் யார்? சீத்தலைச் சாத்தனார்
34. 'அடிகள் நீரே அருளுக ' என்று இளங்கோவடிகளிடம் கூறியவர் யார்? சீத்தலைச் சாத்தனார்
35. 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டைச் செய்யுள் எனச் கூறியவர் யார்?இளங்கோவடிகள்