6th தமிழ்-இயல் 4.2 துன்பம்-வெல்லும்-கல்வி

6th தமிழ்-இயல் 4.2 துன்பம்-வெல்லும்-கல்வி
: :

1. "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ" என்ற பாடலின் ஆசிரியர் யார்? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
2. "மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது" என்ற பாடலின் ஆசிரியர் யார்?பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
3. தூற்றும் படி என்ற சொல்லின் பொருள் என்ன? இகழும்படி
4. மூத்தோர் என்ற சொல்லின் பொருள் என்ன? பெரியோர்
5. மேதைகள் என்ற சொல்லின் பொருள் என்ன? அறிஞர்கள்
6. மாற்றார் என்ற சொல்லின் பொருள் என்ன? மற்றவர்
7. நெறி என்ற சொல்லின் பொருள் என்ன? வழி
8. வற்றாமல் என்ற சொல்லின் பொருள் என்ன? குறையாமல்
9. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார்? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
10. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
11. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
12. மாணவர் பிறர் ______ நடக்கக் கூடாது? தூற்றும்படி
13. நாம் _____ படி நடக்க வேண்டும்? மூத்தோர் அறிவுரை
14. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன? கை + பொருள்
15. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் என்ன? மானமில்லா