6th தமிழ்-இயல் 9.2 மனிதநேயம்

1. "தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே" என்ற பாடல்வரிகள் இடம் பெற்றுள்ள வரிகள் எது? புறநானூறு
2. வள்ளலார் சத்திய தருமச்சாலையைத் தொடங்கிய இடம் எது? வடலூர்
3. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று கூறியவர் யார்? வள்ளலார்
4. அன்னை தெரசாவிற்கு எந்த துறைக்கு நோபல் பரிசு கிடைத்தது? அமைதிக்கான நோபல் பரிசு
5. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்? கைலாஷ் சத்யார்த்தி
6. "வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல; மற்றவர் மனதில் நீ வாழும் வரை" என்று கூறியவர் யார்? அன்னை தெரசா
7. "குழந்தைகளைப் பாதுகாப்போம்" என்னும் இயக்கத்தைத் தொடங்கியவர் யார்? கைலாஷ் சத்யார்த்தி
8. கடந்த முப்பது ஆண்டுகளில் கைலாஷ் சத்யார்த்தி எத்தனை குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்? 86, 000
9. கைலாஷ் சத்யார்த்தி உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் எத்தனை கி. மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார்? 80,000 கி. மீ
10. குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது என்று கூறியவர் யார்? கைலாஷ் சத்யார்த்தி
11. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ----- ? மனித நேயம்
12. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ----- காட்டியவர் வள்ளலார்? அன்பு
13. அன்னை தெரசாவிற்கு ----- க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது? அமைதி
14. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ----- ? குழந்தைகளைப் பாதுகாப்போம்
15. பொருத்துக
i. வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்
ii. கைலாஷ் சத்யார்த்தி – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
iii. அன்னை தெரசா – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்