6th தமிழ்-இயல் 6.2 கடலோடு-விளையாடு

6th தமிழ்-இயல் 6.2 கடலோடு-விளையாடு
: :

1. கதிர்ச்சுடர் என்ற சொல்லின் பொருள் என்ன? கதிரவனின் ஒளி
2. மின்னல்வரி என்ற சொல்லின் பொருள் என்ன? மின்னல் கோடு
3. அரிச்சுவடிஎன்ற சொல்லின் பொருள் என்ன? அகரவரிசை எழுத்துகள்
4. மீனவர்களின் வாழ்கை முறையை அவர்களின் வாழ்விடத்தோடு ஒப்பிடுக? மீன் பிடிக்க கடலுக்குச் செல்பவர்கள் - மீனவர்கள் விண்மீன்கள் - விளக்குகள்; 
விரிந்த கடல் - பள்ளிக்கூடம்; 
கடல் அலையே - தோழன்; 
மேகம் - குடை; 
வண்மையான மணலே - பஞ்சுமெத்தை; 
விண்ணில் இடி - அவர்கள் காணும் கூத்து; 
சீறிவரும் புயலே - விளையாடும் ஊஞ்சல்; 
பனிமூட்டம் - உடலைச் சுற்றும் போர்வை; 
அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் - மேற்கூறை; 
கட்டுமரம் - அவர்கள் வாழும் வீடு; 
மின்னல் கோடுகளே - அடிப்படையான பாடம்; 
வலைவீசி பிடிக்கும் மீன்களே - அவர்களது செல்வம்; 
முழு நிலவுதான் - அவர்கள் கண்ணாடி; 
மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே - அவர்கள் செய்யும் தவம்; 
வானமே - அவர்கள் வணங்கும் தலைவன்
5. நெய்தல் திணையின் நிலம் எது? கடலும் கடல் சார்ந்த இடமும்
6. நெய்தல் திணையின் மக்கள் யார்? பரதவர், பரத்தியர்
7. நெய்தல் திணையின் தொழில் எது? மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
8. நெய்தல் திணையின் பூ எது? தாழம்பூ
9. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடல் எது? நாட்டுப்புறப் பாடல்
10. காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் நாட்டுப்புறப் பாடலை எவ்வாறும் அழைப்பர்? வாய்மொழி இலக்கியம் என்பர்
11. ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலானவை? தொழில்ழிபாடல்கள்
12. விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் ----- பாடல்களுள் அடங்கும்? நாட்டுப்புறப் பாடல்கள்
13. நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலை தொகுத்தவர் யார்? சு. சக்திவேல்
14. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? கதிர் + சுடர்
15. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? மூச்சு + அடக்கி
16. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதுக? பெருவானம்
17. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதுக? அடிக்குமலை
18. பொருத்துக: 
விடிவெள்ளி - விளக்கு
மணல் - பஞ்சுமெத்தை
புயல் - ஊஞ்சல்
பனிமூட்டம் - போர்வை