8th தமிழ் இயல் 5.1 திருக்கேதாரம்

1. "பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? சுந்தரர்
2. பண் என்பதன் பொருள் என்ன? இசை
3. கனககிசுனை என்பதன் பொருள் என்ன? பொன் வண்ண நீர்நிலை
4. மதவேழங்கள் என்பதன் பொருள் என்ன? மதயானைகள்
5. முரலும் என்பதன் பொருள் என்ன? முழங்கும்
6. பழவெய் என்பதன் பொருள் என்ன? முதிர்ந்த மூங்கில்
7. முதிர்ந்த மூங்கில்களால் ஆனது எது? புல்லாங்குழல், முழவு
8. வைரங்கள் போன்ற நீரத்திவலைகளை வாரி இறைப்பது எது? பொன்வண்ண நீர் நிலை
9. மதயானை எவற்றை வாரி வீசும்? மணிகளை
10. இப்பாடலில் எந்த நகரின் சிறப்பை பற்றிக் குறிப்பிடப்பட்டடுள்ளது? திருக்கேதாரம் நகர்
11. தேவாரம் பாடிய மூவரும் ஒருவர்? சுந்தரர்
12. நம்பியாரூரர், தம்பிரான் தோழர் போன்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்? சுந்தரர்
13. சுந்தரரின் பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டடுள்ளது? ஏழாம் திருமுறையாக
14. திருத்தொண்டத் தொகையை இயற்றியது யார்? சுந்தரர்
15. எந்த நூலை முதல் நூலாக கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்துள்ளார்? திருத்தொண்டத் தொகை
16. தேவாரம் யார் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்? நம்பியாண்டார் நம்பி
17. பதிகம் என்பது எதைக் குறிக்கும்? 10பாடல்களின் தொகுப்பு
18. காட்டிலிருந்து வந்த ----- கரும்பைத் தின்றான்? வேழங்கள்
19. 'கணகச்சுனை'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? கனகம் + சுனை
20. முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? முழவதிர