7th தமிழ் இயல் 5.1 இன்பத்தமிழ்க்-கல்வி

1. "எடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்? பாரதிதாசன்
2. எத்தினிக்கும் என்பதன் பொருள்? முயலும்
3. வெற்பு என்பதன் பொருள்? மலை
4. கழனி என்பதன் பொருள்? வயல்
5. நிகர் என்பதன் பொருள்? சமம்
6. பரிதி என்பதன் பொருள்? கதிரவன்
7. அன்னதோர் என்பதன் பொருள்? அப்படிஒரு
8. கார்முகில் என்பதன் பொருள்? மழைமேகம்
9. துயின்றிருந்தார் என்பதன் பொருள்? உறங்கியிருந்தார்
10. எதைக் கற்றால் வாழ்வில் துன்பம் நீங்கி விடும் என்று பாவேந்தர் கூறுகிறார்? இன்பத்தமிழ் கல்வியை கற்றவர்கள்
11. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிப் காப்பியம் போன்ற நூல்கள் எழுதியவர்? பாரதிதாசன்
12. பாரதிதாசனுக்கு எந்த நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது? பிசிராந்தையார்
13. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது? மயில்
14. பின்வருவனவற்றுள் 'மலை 'யை குறிக்கும் சொல்? a. வெற்பு b. காடு c. கழனி d. புவி Answer - a. வெற்பு
15. 'ஏடெடுத்தேன் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? ஏடு + எடுத்தேன்
16. 'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? துயின்று + இருந்தார்
17. என்று + உரைக்கும் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? என்றுரைக்கும்
18. பொருத்துக
a. கழனி - கதிரவன்
b. நிகர் - மேகம்
c. பரிதி - சமம்
d. முகில் - வயல்
a - 4, b - 3, c - 1, d - 2