6th தமிழ்-இயல் 5.2 கண்மணியே-கண்ணுறங்கு

1. தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுவது எது? நாட்டுப்புறப் பாடல்கள்
2. நந்தவனம் என்ற சொல்லின் பொருள் என்ன? பூஞ்சோலை
3. பண் என்ற சொல்லின் பொருள் என்ன? இசை
4. பார் என்ற சொல்லின் பொருள் என்ன? உலகம்
5. இழைத்து என்ற சொல்லின் பொருள் என்ன? பதித்து
6. முத்தேன்? கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
7. முக்கனி? மா, பலா, வாழை
8. முத்தமிழ்? இயல், இசை, நாடகம்
9. தாலாட்டு எந்த இலக்கியங்களுள் ஒன்று? வாய்மொழி இலக்கியங்களுள்
10. தால் என்ற சொல்லின் பொருள் என்ன? நாக்கு
11. நாவை அசைத்துப் பாடுவதால் ______ என்று பெயர்பெற்றது? தாலாட்டு (தால் + ஆட்டு)
12. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல்? தாலாட்டு
13. தாலாட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன? தால் + ஆட்டு
14. 'பாட்டிசைத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன? பாட்டு + இசைத்து
15. 'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன? கண் + உறங்கு
16. வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன? வாழையிலை
17. கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன? கையமர்த்தி
18. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் என்ன? மறைந்த