10th தமிழ் இயல் 1.5 எழுத்து-சொல்

1. சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை? 10
2. அளபெடுத்தல் என்றால் என்ன? நீண்டு ஒலித்தல்
3. உயிரளபெடை எத்தனை வகைப்படும்? 3 வகைப்படும்
4. மூன்று வகையான உயிரளபெடை யாவை? செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
5. செய்யுளிசை அளபெடையின் மற்றோரு பெயர் என்ன? இசைநிறை அளபெடை
6. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துக்கள் அளபெடுதலைச்? செய்யுளிசை அளபெடை என்போம்
7. செய்யுளிசை அளப்படைக்கு எடுத்துக்காட்டு? ஓஓதல், உறாஅர்க்கு, படாஅ
8. நசை என்பதன் பொருள் என்ன? விருப்பம்
9. செய்யுளிசை ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது ஆகும்? இன்னிசை அளபெடை
10. இன்னிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு? கொடுப்பதூஉம், எடுப்பதூஉம்
11. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச செல்லகாத் திரிந்து அளபெடுப்பது எந்த அளபெடையில்? சொல்லிசை அளபெடை
12. சொல்லிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு? உரனசைஇ, வரனசைஇ
13. ஒற்றளபெடையில் எத்தனை எழுத்துக்கள் அளபெடுக்கும்? 10 எழுத்துக்கள்
14. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் 11எழுத்துக்கள் யாவை? ங், ஞ, ண், ந், ம், ன், வ், ய், ல், ள் மற்றும் ஃ
15. ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது? சொல் ஆகும்
16. மூவகை மொழி யாது? தமிழ் மொழி, தொடர் மொழி, பொது மொழி
17. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது? தனி மொழி
18. கண், படி தனித்து நின்று பொருள் தருமாயின் அது? பாகப்பதம்
19. கண்ணன், படிதான் தனித்து நின்று பொருள் தருமயின் அது? பகுபதம்
20. இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது? தொடர்மொழி ஆகும்
21. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும், தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது? பொதுமொழி ஆகும்
22. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றை குறிப்பாகவே வெளிப்படையாகவே உணர்த்தாமல் வருவது? தொழிற்பெயர்
23. தொழிற்பெயருக்கு உதாரணம் தருக? ஈதல், நடத்தல்
24. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர்? விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்
25. விகுதி பெற்ற தொழிற்பெயருக்கு உதாரணம்? வினையடி - நட, வாழ், ஆள் விகுதி - தல், கை, அல், தொழிற்பெயர் - நடத்தல், வாழ்க்கை, ஆளல்
26. ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும் எடுத்துக்காட்டு? நட என்பது வினையடி (நடை, நடத்தை, நடத்தல்)
27. எதிர்மறைப் பொருளில் வருவது? எதிர்மறை தொழிற்பெயர் ஆகும்
28. எடுத்துக்காட்டு? நடவாமை, கொல்லாமை
29. விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல்? முதனிலைத் தொழிற்பெயர் ஆகும்
30. எடுத்துக்காட்டு? தட்டு, உரை, அடி, முறையே (தட்டுதல், உரைத்தல், அடித்தல்) என பொருள்படும்
31. விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்? முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்
32. தொழிற்பெயர் - கெடுதல், சுடுதல், முதனிலைத் தொழிபெயர் - கெடு, சுடு, முதநிலைத் திரிந்த தொழிற்பெயர் - கேடு, சூடு ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது? வினையாலணையும் பெயர் ஆகும்
33. எகா? - வந்தவர் அவர்தான் பொறுத்தார் பூமியாள்வார் தொழிற்பெயருக்கும் வினையாலனையும் பெயருக்கும் உள்ள வேறுபாடு?
தொழிற்பெயர் - வினை, பெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும், காலம் காட்டாது, படர்க்கைக்கே உரியது, எகா - பாடுதல், படித்தல்
34. வினையாலணையும் பெயர்? தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும், காலம் காட்டும், மூவிடத்திற்கும் உரியது, எகா - பாடியவன், படித்தவர்
35. மொத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது? வணிகக் கப்பல்கலும், ஐம்பெரும் காப்பியங்களும்
36. காய்ந்த இலையும் காய்ந்த தொகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது? சருகும் சண்டும்
37. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்? எம் + தமிழ் + நா
38. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயர், வினையாலனையும் பெயரும் முறையே? பாடல்; கேட்டவர்
39. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை? மணி வகை
40. மரமது மரத்தில் ஏறி என்ற பாடலின் ஆசிரியர் யார்? சுந்தர கவிராயர்
41. "தேனினும் ஊறிய செந்தமிழின் மொழியே என்று தமிழைச் சிறப்பித்தவர் யார்? கா. நமசிவாயர்
42. vowel என்பதன் தமிழ் சொல்? உயிரெழுத்து
43. consonant என்பதன் தமிழ் சொல்? மெய்யெழுத்து
44. homograph என்பதன் தமிழ் சொல்? ஒப்பெழுத்து
45. monolingual என்பதன் தமிழ் சொல்? ஒரு மொழி
46. conversation என்பதன் தமிழ் சொல்? உரையாடல்
47. discussion என்பதன் தமிழ் சொல்? கலந்துரையாடல்
48. நாம் என் தமிழ் கற்க வேண்டும் என்ற நூலின் ஆசிரியர் யார்? ? முனைவர் சேதுமணி மணியன்
49. தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்ற நூலின் ஆசிரியர் யார்? ? மா. நன்னன்
50. பச்சை நிழல் என்ற நூலின் ஆசிரியர் யார்? ? உதயசங்கர்