10th தமிழ் இயல் 7.6 புறப்பொருள்-இலக்கணம்

1. புறம் பற்றிய நெறிகளை கூறுவது? புறத்திணை
2. புறத்திணை எத்தனை வகைப்படும்? 12
3. ஆநிரையை கவர்தல்? வெட்சித்திணை எனப்படும்
4. இட்லிபூ என்று அழைக்கப்படும் பூ? வெட்சிப்பூ
5. ஆநிரைகளை மீட்டல்? கரந்தைத் திணை எனப்படும்
6. கரந்தைப்பூ என்ன வடிவில் இருக்கும்? முட்டை வடிவம்
7. கரந்தைப் பூவின் நிறங்கள் யாது? செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு
8. 'கொட்டைக் கரந்தை' என்று அழைக்கும் பூ? கரத்தைப் பூ
9. கரத்தைப் பூ என்ன வடிவில் இருக்கும்? முட்டை வடிவம்
10. மண்ணாசைக் காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்ற செல்வது? வஞ்சித்திணை
11. தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்து போர் புரிதவது? காஞ்சித்திணை
12. காஞ்சி என்பது? ஒருவகைக் குறுமரம்
13. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு போரிடுவது? நொஞ்சித்திணை
14. மருதநிலத்திற்க்கு உரிய பூ எது? நொச்சிப் பூ
15. நொச்சியின் வகைகள் யாவை? கருநொச்சி, மலைநொச்சி, மணிநொச்சி, வெண்ணொச்சி
16. கோட்டையை சுற்றி வளைத்தல் (எயிலை வளைத்தல்)? உழிஞைத் திணை எனப்படும்
17. வேலிகளில் ஏறிப்படரும் நீண்டகொடி எது? உழிஞைக் கொடி
18. முடக்கத்தான் (முடற்கொற்றான்) என அழைக்கப்படும் பூ எது? உழிஞைபூ
19. வெற்றி ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு இரு மன்னர்களும் போர் புரிவது? தும்பைத்திணை
20. போரில் வென்ற மன்னன் சூடுவது? வாகைத்திணை
21. மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் பூ? வாகைப் பூ
22. பாடுவதற்குத் தகுதியுடைய ஒரு ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றிப்பாடுவது? பாடான்திணை
23. வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதவற்றையும் கூறுவது? பொதுவியல் திணை
24. கைக்கிளை என்பது? ஒருதலைக் காமம்
25. பெருந்திணை என்பது? பொருந்தாக் காமம்
26. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க? உழவு, ஏர், மண், மாடு அ) உழவு, மண், ஏர், மாடு ஆ) மண், மாடு, ஏர், உழவு இ) உழவு, ஏர், மண், மாடு ஈ) ஏர், உழவு, மாடு, மண்
27. "மாலவன் குன்றம் போலனென்ன? வேளாண் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்" - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே? திருப்தியும், திருத்தணியும்
28. 'தன நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்? நெறியோடு நின்று காவல் காப்பவர்
29. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம்? வலிமையை நிலைநாட்டல்
30. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம. பொ. சி. கருதியது? சிலப்பதிகாரம்
31. 'ஏர்பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்துக் கூறுவோம்' என்ற பாடல் வரியை இயற்றியது யார்? கவி. க. மு. செரீப்
32. 'அம்மா என் காதுக்கொரு தோடு - நீ அவசியம் வாங்கி வந்து போடு' - என்ற பாடல் வரியை இயற்றியது யார்? பாரதிதாசன்
33. வீறுகொண்டு முன்னேறும் காலாட்படை குதிரைப்படை, யானைப்படை 17 - ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது? திருப்புடைமருதூர். திருநெல்வேலி
34. என் கதை நூலின் ஆசிரியர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
35. வேருக்கு நீர் என்ற நூலின் ஆசிரியர் யார்? ராஜம் கிருஷ்னன்
36. நாற்காலிக்காரர் என்ற நூலின் ஆசிரியர் யார்? ந. முத்துசாமி