10th தமிழ் இயல் 4.5 இலக்கணம்-பொது

1. பரிபாடல் அடியில் "விசும்பும் இசையும்" என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது? வானத்தையும் பேரொலியையும்
2. குலசேகர ஆழ்வார் "வித்துக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே? பால் வழுவமைதி, திணை வழுவமைதி
3. பாரத ஸ்டேட் வங்கியின் உரையோடு மென்பொருள் எது? இலா
4. முகப்புத்தக வலையினிலே என்ற கவிதையை இயற்றியவர் யார்? டெபோரா பர்னாந்து (இலங்கை தமிழ்க் கவிஞர்)
5. "நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே" என்ற வரியை பாடியவர் யார்? பாரதியார்
6. Nanotechnology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? மீநுண்தொழில்நுட்பம்
7. Biotechnology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? உயிர்த் தொழில் நுட்பம்
8. Ultraviolet rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? புற ஊதாக் கதிர்கள்
9. Space Technology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? விண்வெளி தொழில்நுட்பம்
10. Cosmic rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? விண்வெளிக் கதிர்கள்
11. Infrared rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? அகச்சிவப்பு கதிர்கள்
12. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்? நீலமணி
13. அன்றாட வாழ்வில் அறிவியல் என்னும் நூலின் ஆசிரியர் யார்? ச. தமிழ்ச்செல்வன்
14. காலம் என்னும் நூலின் ஆசிரியர் யார்? ஸ்டீபன் ஹாக்கிங்
15. இருதிணைகள் யாது? உயர்திணை, அஃறிணை (அல்திணை)
16. ஆறறிவுடைய மக்களை ----- என்றும், மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் ----- என்றும் வழங்குவர்? உயர்திணை, அஃறிணை (அல்திணை)
17. திணையின் உட்பிரிவு என்ன? பால்
18. பால் என்பதன் பொருள் என்ன? பகுப்பு, பிரிவு
19. பால் எத்தனை வகைப்படும்? 5 வகைப்படும்
20. உயர்திணையின் பகுப்புகள் யாவை? ஆண்பால், பெண்பால், பலர்பால்
21. அஃறிணையின் பகுப்புகள் யாவை? ஒன்றன்பால், பலவின் பால்
22. உயர்திணைக்குரிய பால் பகுப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை? வீரன், அண்ணன், மருதன் - ஆண்பால்
23. அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் எடுத்துக்காட்டு தருக? யானை, புறா, மலை
24. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் எடுத்துக்காட்டு தருக? பசுக்கள், மலைகள்
25. இடம் எத்தனை வகைப்படும்? 3 வகை (தன்மை, முன்னிலை, படர்க்கை)
26. தன்மை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு? நான், யான், நாம், யாம்
27. தன்மை வினைகளுக்கு எடுத்துக்காட்டு? வந்தேன், வந்தோம்
28. முன்னிலை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு? நீ, நீர், நீவிர், நீங்கள்
29. முன்னிலை வினைகளுக்கு எடுத்துக்காட்டு? நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்
30. படர்க்கை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு? அவன், அவள், அவர், அது, அவை
31. படர்க்கை வினைகளுக்கு எடுத்துக்காட்டு? வந்தான், சென்றான், படித்தான், பேசினார்கள், பறந்தது, பறந்தன
32. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும், எழுதுவதும்? வழாநிலை
33. இலக்கண முறையின்றி பேசுவதும், எழுதுவதும்? வழு நிலை
34. இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது? வழுவமைதி
35. வழு, வழாநிலை எந்த தொடர்களில் வரும்? திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு
36. திணை வழுநிலைக்கு எடுத்துக்காட்டு? செழியன் வந்தது
37. திணை வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? செழியன் வந்தான்
38. பால் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு? கண்ணகி உண்டான்
39. பால் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? கண்ணகி உண்டாள்
40. இடம் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு? நீ வந்தேன்
41. இடம் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? நீ வந்தாய்
42. காலம் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு? நேற்று வருவான்
43. காலம் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? நேற்று வந்தான்
44. விடை வலுநிலைக்கு எடுத்துக்காட்டு? கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்
45. விடை வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்
46. மரபு வலுநிலைக்கு எடுத்துக்காட்டு? தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோட்டம் என்று கூறுதல்
47. மரபு வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோப்பு என்று கூறுதல்
48. "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்து கூறுவது? திணை வழுவமைதி
49. "வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது? பால் வழுவமைதி
50. மாறன் என்பான் தன்னைப்பற்றி பிறரிடம் கூறும்போது, "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" என தன்மையினை படர்க்கை இடத்தில கூறுவது? இடவழுவமைதி
51. "குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகிறார்" என்பது? கால வழுவமைதி
52. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது? இறைவனிடம் குலசேகராழ்வார்